Jayalalithaa’s Last Coffee With Cho?

All good short stories have a major twist in the tale.

Tamil Nadu legislative assembly is seeing fantastic twists and turns – perhaps forcing Annadurai, MGR and Jayalalithaa to twist in their graves – all located within 50 metres of each other and within 1 km from the state’s seat of power – Fort St George.

The factual part is shaming all Tamils incessantly.

The fictional part of this tale has an almost unbelievable climax!

The truly unbelievable nature of Tamil Nadu’s recent political events takes one’s breath away.

Till she was alive, J Jayalalithaa, India’s most enigmatic woman politician was hailed as ‘the permanent Chief Minister’.

The third calendar month after her passing is yet to begin. The permanence of Jaya’s memory has been reduced to near nothingness. The person, who succeeded in doing that through a vain attempt to capture power vide a slightly ajar backdoor, is the late CM’s former servant maid, Sasikala Natarajan. She is currently languishing in prison.

Utterly shameless sections of Chennai-based media milled around Sasikala, wrote highly in her praise and worse, accorded wide publicity to the outrageous claims made by Natarajan, Sasikala’s criminally inclined husband. The man had the temerity to say that it was he and his wife who had created the legend of invincibility around the persona of Jayalalithaa by guiding her political career. This man had been jailed when Jaya was alive.

None would have dared to do such things, had another person – a personal friend to most Indian politicians and also their harshest critic – Cho S Ramaswamy been alive.

Cho passed away within 48 hours of Jaya’s demise.

Turning the clock back in real life is impossible. Fiction based on real life events gives one that opportunity.

What would the scenario be, had Jayalalithaa and Cho remained alive in 2021 – by when the woman would complete serving her prison term?

The parameters of the situation have been set by the recent ruling of the Apex Court, convicting Jaya on charges of amassing wealth disproportionate to her known sources of income. Posthumously, the female revolutionary leader has been convicted.

Resurrection of Jayalalithaa’s political career is out of the question. If she had been alive, the portly ex-CM would have had to spend 4 years in incarceration. Upon release, she would have had to spend 6 years in a state of political non sequitur. That would have rendered her a pale shadow of her former self if she had continued to live.

I have had the privilege of having fought with her in press interviews. Whatever be her faults, she was one determined woman.

I imagined what could happen if Cho and Jayalalithaa – old friends since their start of their acting careers – met at Chennai’s Marina Beach – the very venue that can be viewed clearly from the state’s police headquarters. Some 500,000 miscreants had been allowed to congregate to hold the state to ransom for 10 days in January 2017. The state police discreetly gave everyone to understand that the brouhaha over Jallikkattu had taken place “unexpectedly” and due to the infiltration of non-state actors of the anti-social kind.  

That yarn obviously triggered derisive disbelief spanning the length and breadth of India that is Bharat.  Nevertheless, Tamil Nadu’s politicised officialdom is continuing to mouth the offensive offal jargon of having been surprised by anti-social elements.

The following  paragraphs are fantastic as well … but … 

Cho is having a cup of coffee in the restaurant behind the Gandhi Statue – in the evening – around 6-30 p.m.

The date: December 5 2021.

The shadows have lengthened. A mild wintry nip in the air accords the scene a slight eerie look.

Jayalalithaa alights from her car on the eastern side of the restaurant.

Noticing her, Cho takes a few steps towards her. Jaya’s male servant brings in an ornate chair for the lady to sit comfortably. A police constable on duty to guard Cho brings a plastic chair from the restaurant and places it next to the table. 

“So, Cho…” Jaya begins hesitantly.

As you sow, so you reap, goes the adage. You had sowed the wind, the whirlwind showed up and hit you.” Cho replies adding his customary mischievous smile.

“Why am I being led to think that you wantonly used the word sow? The word also means a fully grown female pig.” Jayalalithaa smiles as she utters the sentence, but the smile doesn’t reach her eyes.

“Had I wanted to pun on the word, I would have rather compared you to a gold bar. A sow also means a metal ingot created by pouring molten ore through a mould. That is what you are – a hard shrewd shrew as hard as hardened molten ore, which is still hot. Your hard-heart is so fastidious that it can hardly be pleased. That is why, politics of this state has shooed and ‘shoed‘ you off!”

“You haven’t lost your sarcasm. You are punning better than before.” This time, Jaya laughs out loud and her mirth reaches her eyes.

“Those are gifts from sins of a misspent youth. Some of those years were spent with you and several others like MGR, Shivaji Ganeshan, Jai Shankar to name just three… on garish movie sets. The resultant public image of a smart Alec wise-cracking wiseguy helped in according me a little fame … and aided the takeoff of my magazine Thuglak. Else, I am only left with the puns whose fun quotient is getting less and less these days. As far as the sarcasm goes, well, who cares about it is a question that haunts me. Few politicians, cops and journalists agree with most of what I say and write. The common public say that my ideas are so good that they are impractical.”

Cho shrugs his shoulders to express frustration and retrieves his smoking pipe.

Jayalalithaa seems aghast.

“You shouldn’t be smoking, Cho! I remember seeing you in Apollo and you were supposed to stop all kinds of bad breath. Smoking is one of them.”

“You need to change your spectacles, Jaya. You can notice that my pipe is without tobacco. I just use it as some kind of prop and draw air when memories haunt me.”

“Thank God! For a moment…”

“You are not a beach-comber. You obviously arrived here by design.” Cho says this with mischief making his eyes crinkle.

“I came to meet you.”

Jayalalithaa’s voice is flat and without emotion.

“I thought as much.”

“Your weekly deadline ended this afternoon. I was informed that you secretly spend time at the seashore … perhaps to imbibe the rich, ozone filled air.”

“If you are able to suss that out, it can’t be much of a secret. Say your piece, please. I am all ears.”

“My political life …or what is left of it …is over. I only have bitter, distant memories.”

“OK.”

“I want to serialise my memoirs. I thought of doing it in Thuglak. Remember, I once wrote in your magazine.”

“It would be a good idea.”

Cho signals the waiter. He brings a cup of coffee and leaves it in front of Cho.

She takes a sip, wrinkles her nose expressing dissatisfaction at its taste.

“It isn’t poison. On sets, we have drunk worse coffee.”

“Don’t skirt the issue. Will you publish my memoirs?”

“Of course, I will. But, if you write something controversial, I will add my comment at the bottom to set the record straight. You know the drill.”

“Of course, I do. But, my memoirs are bound to create a sensation. I am going to reveal how Sasikala robbed me of most of my wealth, convinced me to earn money for the sake of members of her extended family and why I had to suffer in prison for it. The worst part is that she tried to kill me. I am getting even and will clear my name, if that is the last thing I do. I will leave nothing to chance.

“You can’t be serious. That would need evidence or else … it would be libel.”

“I have all the evidence at home. Why don’t you come to Veda Nilayam now? I will give you the first 4 episodes right away.”

Jayalalithaa says this in an excited voice.

“You go ahead. I will reach there in some 10 minutes. I am expecting someone here.”

“Okay. I will get really good coffee made for you at home.”

Jaya leaves. Her assistant picks up her ornate chair and the car is driven away.

Cho’s driver rushes in with a mobile phone.

“You had left it for charging in the car, sir. It is ringing!”

Cho sees a familiar number and flicks the button to speak. He says loudly, “Yes!”

“Sir, TSV Hari, here. Just now, television channels are showing that the former CM Jayalalithaa’s home Veda Nilayam is on fire…Fire tenders have been rushed, but initial reports indicate that she may not have survived.”

What?”

Cho suddenly notices that the coffee on the table is left untouched. Puzzled, he gets up, takes a short walk around the table. There are no marks of a chair having been placed or those of the footprints supposed to have been left when Jaya had departed.

The waiter approaches.

“Shall I take away that coffee you ordered sir? It has been some 20 minutes since I left it there. Perhaps you had forgotten that you had ordered it.”

“I had ordered it for …my guest!”

“But there was no guest, sir. You suddenly got up and came to this table, so I moved the coffee cup. Perhaps … inadvertently… you forgot about this coffee. It has gone cold.”

Cho speaks into the phone.

“Hari, are you sure of the fire?”

Hari replies in the affirmative.

“I was in the vicinity of Poes Garden when this happened. I am standing in front of Veda Nilayam. The fire is huge. Whoever was inside perhaps had no chance to escape alive, is what the fire fighters are saying,” Hari responds.

“Was there anyone else inside…some servant or…”

“Apparently, Sasikala was released from prison today and she entered some 30 minutes ago, according to eyewitnesses. None saw her leave.”

“OK. You come to the office. I have something fantastic to tell you. And you will get excellent coffee in the office today!” Cho cuts the connection.

He gets up, looks at the spot, where he had seen Jaya seated and sadly shakes his head.

“As far as I am concerned, old girl, you did it all in one go. You got even, got your name cleared with me, and, in a strange way, left nothing … to chance!”

Sadness writ large on his face, Cho murmurs the sentence under his breath. He walks towards his car flanked by his guard and driver.

உளவுகாத்த கிளி – 13

“உங்களுக்கு நேரடியாப் பேசற பழக்கமுண்டா?”

“உண்டே!”

“அப்போ, அப்படியே பேசுவோமே! இந்த அளவுக்குச் சுழற்ற வேண்டியதில்லை. இது ஒரு காஷுவல் சந்திப்பு இல்ல. நீங்க எனக்காக…”

அவர் இடைமறித்தார்.

“என் ஃப்ரென்ட்ஸ் எல்லாம் என்னை Bob ன்னு கூப்பிடுவாங்க. சர்ச்சுல எனக்கு வெச்ச பெயர் Robert Louis. ராபர்ட்ன்ற பெயர் பழங்காலத்துல சுருங்கினப்ப அது பாப் ஆச்சு…. இங்க்லீஷ்ல ராப் ன்னா கொள்ளை அடிக்கறதுன்னு அர்த்தம் … ங்கற காரணத்தால கூட அப்படி நடந்திருக்கலாம். உன்னோட காவல்துறை ஃப்ரென்ட்ஸ் – துர்லபாடின்ற பெயரை சுருக்கி துருன்னு கூப்பிடுவாங்கன்னு கேள்விப்பட்டேன். … ரொம்ப நேரடியாப் பேசறேனோ?”

“அடங்கொக்கா… மக்கா….”

“பொடாங்…. கொய்யால!”

சிரித்துக் கொண்டே நம்ம ஊர் தமிழில் பதில் சொன்னான்.

எனக்கு ஷாக்.

“இந்த அளவுக்கு நாங்க ஒற்றர் பணியில சித்து வேலை பண்ணக்கூடியவங்கன்னு காட்டினதால தான் நாங்க உலகத்துல பெரிய பகுதியை ஆள முடிஞ்சுது. நீங்களும் ஒண்ணும் கொறஞ்சவங்க இல்ல. காஷ்மீர்ல பாகிஸ்தான் செய்யற நாசவேலைக்கு – பழிக்குப் பழி வாங்க – பலூச்சிஸ்தான்ல உங்க ஆளுங்க புகுந்து விளையாடிகிட்டு இருக்காங்க. விடுதலைப் புலிகள் தலைவன் பிரபாகரனோட கும்பல்ல, இறுதி நேரத்துல அவனைச் சுத்தி இருந்த ஆளுங்கள்ள உங்க நாட்டு ஒற்றன் முக்கியமானவன். அதோட விளைவா, 2009 ஜனவரியில இலங்கைப் படைத் தளபதி ஃபோன்ஸேக்கா, பிரபாகரன் இலங்கையிலேந்து தப்பிச்சிருக்கலாம்னு சொன்னான். அதிபர் தேர்தல்ல கோட் அடிச்சி, போர்க் குற்றவாளி ராஜபக்ஸ உபயத்துல 3 வருஷம் ஃபோன்ஸேக்கா ஜெயில்ல இருந்தான். அந்தப் பய இப்பக்கூட வெளி நாடுகளுக்குப் போக முடியாது. நாங்க ரொம்ப நாளா இந்த ஜிகினா வேலைகளைப் பண்ணறதால எங்க மெத்தட் ரொம்ப ஸாஃபிஸ்டிகேடட் மாதிரி தெரியிது. ஆக்ச்சுவலி, எல்லா விஷயத்துலயும் இன்டியன்ஸ் ஆர் காச்சிங் அப். நாங்க கண்டுபிடிச்ச விளையாட்டான கிரிக்கட்டையே எடுத்துக்க. 1983 ல, உங்க ஊரு டீம், கபில் தேவ் தலைமைல எங்க ஊருக்கு வந்து உலகக் கோப்பையை தட்டிகிட்டு போச்சு. இப்போ இருக்கறதுலேயே ஸ்ட்ராங்கான டீம்ல இந்தியா டாப்ல இருக்கு. கிரிக்கட்டோட கடவுளான சச்சின் யார்க்ஷைர் கவுன்ட்டி டீமுக்காக ஆடறப்ப, நா எல்லாம் லீட்ஸ் க்ரவுண்டுல நின்னு, விடாம விசிலடிச்சிரிக்கேன். உளவுத் துறைலயும் உங்க நாடு வர்ல்டு சாம்பியன் லெவலுக்கு வந்துரும். 2002ல குஜராத்ல நடந்த சம்பவங்கள்னால அந்த ஊர் ஸி எம் மோடிக்கு எங்க ஊருக்கு வர விசா இல்லன்னு இன்னமும் பாவலா பண்ணிகிட்டு இருக்கோம். ஆனா, எல்லா மேற்கத்திய நாடுகளோட தலைமைகளுக்கும். உண்மையில அவரை ரொம்பப் பிடிக்கும். அவரு பிரதமராகறப்ப எல்லா மேற்கத்திய நாடுகளும் அவருக்கு விழுந்து விழுந்து உபச்சாரம் பண்ணும்.”

“குஜராத்னு நீ திடீர்ன பேச்சை மாத்தின…”

“அதுக்கான காரணம் பில்கிஸ் அஷ்ரஃப் கான்.”

அதிர்ந்து போனேன்.

பில்கிஸ் காரணத்தால தான் நான் சாவித்ரியை விவாகரத்துப் பண்ண வேண்டி வந்தது. பில்கிஸ் கானுக்கும் அவ புருஷன் அஷ்ரஃபுக்கும் அடைக்கலம் குடுத்த காரணத்துனால சாவித்ரி உட்பட என்னோட வேட்டகத்து மனிஷங்க அவ்வளவு பேரும் தீக்கிரையானார்கள்.

அந்த வெள்ளைக்காரன் தொடர்ந்தான்.

“சாவித்ரியும் அவங்க பேரன்ட்ஸும் செத்தது ஹின்டூஸ் வெச்ச தீயினால இல்ல. குஜராத்ல மதக் கலவரங்களத் தூண்ட பாகிஸ்தான் ஒரு பெரிய கேம் ஆடினாங்க. மேலும், அந்தப் பொம்பள பேரு பில்கிஸ் கானே இல்ல. நிஜப் பெயர் ஜீனத் இப்ராஹிம் தரார். பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உளவு ஸ்தாபனத்தில் இப்ப கர்னல் பதவில இருக்கற அதிகாரி. ஆனா, அதுக்கு எந்த ரெக்கார்டும் கிடையாது. அவளும், அவளோட கணவனா நடிச்ச அவளோட ஸுபீரியர் ஆஃபீஸர் அஷ்ரஃப் கான் ங்கற பெயர்ல சுத்தின இன்னொரு ஸ்பை – ஆலம்கீர் கான் பிஸஞ்சோ. இப்போ அவன் ப்ரிகேடியர் ராங்க் அதிகாரி …. அவனோட பெயரும் ரெக்கார்ட்ல கிடையாது …. ரெண்டு பேரும் இப்போ மாளத்தீவோட குடிமக்கள் வேஷத்துல – டெல்லியில ஏதோ பிஸினஸ் பண்ணறதாப் பொய் சொல்லிகிட்டு உளவு வேலை பார்க்கறாங்க.”

மனதுள் கொப்புளித்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கினேன்.

“ஏன் … எப்படி??”

“இந்த ரெண்டு பாகிஸ்தான் உளவாளிங்களும் பண்ணற நாச வேலை என்னன்னு …ஒரு நாள் சாவித்ரிக்கு அகஸ்மாத்தாப் புரிஞ்சு போச்சு. ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணினா. நீ என்ன வேலை செய்யறன்னு சாவித்ரிக்குத் தெரியாது. உன்கிட்ட மன்னிப்புக் கேட்டு, மறுபடியும் உன்னோட ஒண்ணு சேர முடிவு பண்ணி, ஒரு லெட்டர் எழுத ஆரம்பிச்சா. அந்த நேரத்துல பில்கிஸ் வீட்டுல இல்ல. கொஞ்சம் அஜாக்கிரதையா அதை டேபிள் மேல வெச்சு பாத்ரூம் போன நேரத்துல, பில்கிஸ் வீட்டுக்குள்ள வந்தா. அந்த லெட்டர் அவ கண்ணுல பட்டிரிச்சி. நீ என்ன வேலை பண்ணறன்னு உன் பொண்டாட்டிக்கு வேணும்னாத் தெரியாம இருந்திருக்கலாம். ஆனா, ஜீனத் ன்ற பில்கிஸுக்குத் தெரியும். ரெண்டு பேருமா ஒரு மயக்க மருந்து ஸ்ப்ரே அடிச்சி சாவித்ரி, அவங்க பேரன்ட்ஸ் எல்லாரையும் unconscious ஆக்கினாங்க. கவனமா உன் வைஃப் எழுதின லெட்டரை தூக்கி தன்னோட ஹேன்ட் பேக்ல பில்கிஸ் வெச்சிகிட்டா. மற்ற எல்லா ருசுக்களையும் சுருட்டி இடுத்துகிட்டா. கொண்டு போக முடியாத ஆதாங்கள் மேல பேட்ரோலை ஊத்தினா. வீட்டுக்கு வெளியே வர்றப்ப, கிச்சன்ல சமையல் கியாஸைத் திறந்து விட்டு, பத்து நிமிஷத்துல வெடிக்கற ஒரு சின்ன டைம் பாம் உள்ள வெச்சிட்டு, சத்தம்போடாம காந்தி நகர் பக்கம், ஹின்டூஸ் வேஷத்துல போயிட்டாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு வெறிபிடிச்ச ஒரு ஹின்டூ கும்பலுக்கு, உன் வைஃப் ஃபேமிலி முஸ்லிம்ஸ்க்கு அடைக்கலம் குடுத்த விஷயத்தை வத்திவெச்சிட்டாங்க. அந்தக் கும்பல், உன் வைஃப்“ஃபேமிலியை ‘தண்டிக்க’ அவங்க பங்களாவை நெருங்கறதுக்கும் அந்த டைம் பாம் வெடிக்கறதுக்கும் கரெக்டா இருந்தது. எரிய ஆரம்பிச்ச வீட்டுல இந்தப் பைத்தியக்கார கும்பலும் கொள்ளிக்கட்டைகளை எறிஞ்சிச்சி. அந்த ஃபேமிலி அந்த மதக்கலவரத்தோட இன்னொரு செட் ஆஃப் விக்டிம்ஸ்னு எல்லாரும் நெனச்சாங்க. ஆவணங்கள் அதைத் தான் சொல்லுது. ரொம்பப் பேர் அதை உண்மைன்னு நம்பினாங்க. அதுல நீயும் சேர்த்தி.”

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?”

“ரொம்ப நாளாவே ஐ எஸ் ஐ யும் இலங்கையோட தமிழ் புலிகள் மத்தியில இருக்கற சில பேருக்கும் உள்ள தகாத உறவு எங்களுக்குத் தெரியும். அந்தக் கட்டிச் சொத்துக்குள்ள ஒரு பெருச்சாளியை நாங்க அனுப்பினோம். இன்ஃபர்மேஷன் வர ஆரம்பிச்சுது. அந்தப் பெருச்சாளியை புலிகள் இந்தியாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணின டைம்ல தான் இலங்கைக் கலவரம் அதிகமாயி… அதுல கொஞ்சம் காம்ப்ளிக்கேஷன்…. எப்படியோ … அந்த ஏஜன்டோட ஐடென்டிடி பாகிஸ்தான் டீமுக்குத் தெரிஞ்சுபோச்சு … இந்த ஏஜன்டுக்குப் பணத் தட்டுப்பாடு இருக்கற ஒரு வீக் மொமென்ட்ல … கள்ள நோட் மேட்டரை செட் அப் பண்ணி … “

பாப் கை கொஞ்சம் நடுங்கிற்று. மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

“அந்த ஏஜன்டோட பெயர் … சிவபுண்ணியம் பட்குணராஜா. கோட் நேம் அமேலியா லூயிஸ்.”

“வக்காளி!”

“நாங்க அவள நேரடியா வெளியே எடுக்க ட்ரை பண்ணினது வெளியே தெரிஞ்சா ரொம்பச் சிக்கலாயிரும்னு, உன் மூலமா அத்தச் செஞ்சு, ஃபுள் டீடெயில்ஸ அவ மூலமாவே உனக்குக் குடுக்கலாம்னு இருந்தப்ப…  பாவம் … அமேலியான்ற சிவபுண்ணியத்தை ஜெயிலுக்கு வெளியே போட்டுத் தள்ளிட்டாங்க. தனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா, உனக்கு ஒரு கிஃப்ட் குடுக்க சிவபுண்ணியம் முடிவு செஞ்சிருந்தா. அதைக் குடுக்கறதுக்காகத் தான் நா இங்க காத்துகிட்டு இருக்கேன்.”

அவன் தனது பெட்டியைத் திறந்தான்.

“ஜெட் ஏர்வேஸ் டெல்லி ஃப்ளைட்… லாஸ்ட் கால் ஃபார் மிஸ்டர் ராபர்ட் லூயி,”ன்னு அறிவிப்பு என் காதில் விழுந்தது.

ஒரு கனமான கவரை எடுத்த ராபர்ட், கவனமாகப் பெட்டியை மூடி, எழுந்து நடக்க ஆயத்தமாயி, அதை என்னிடம் நீட்டினான்.

“உன்னை எப்படி ரீச் பண்ணறதுன்னு எங்களுக்குத் தெரியும். இந்த நேரத்துல கேள்வி எதுவும் கேக்காத பதில் சொல்ல நேரமில்ல. ஃப்ளைட்க்கு டைம் ஆயிரிச்சி. கவர்ல நிறையா ஸர்ப்ரைஸஸ்…” சம்பிரதாயத்திற்கு கை குலுக்கி, அவன் விறுவிறுவென நடந்து சென்று விட்டான்.

கவரைப் பிரித்தேன்.

சுமார் 15 காகிதங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலே… எனக்கு மிகவும் பழக்கமான கையெழுத்தில், சாவித்ரி இறுதியா “டார்லிங் துரு”ன்னு கடிதத்தை ஆரம்பிச்சிருந்ததை கவனித்தேன். மனசை என்னவோ செய்தது.

-தொடரும்.

பின் குறிப்பு:

இந்தக் கதையின் முன் அத்தியாயங்களைப் படிக்க, கீழ்க்காணும் லிங்குகளைக் க்ளிக் செய்யவும்:

அத்தியாயம் 12அத்தியாயம் 11அத்தியாயம் 10அத்தியாயம் 9அத்தியாயம் 8அத்தியாயம் 7அத்தியாயம் 6அத்தியாயம் 5அத்தியாயம் 4அத்தியாயம் 3;  அத்தியாயம் 2அத்தியாயம் 1

உளவுகாத்த கிளி – 12

The latest chapter from my international spy thriller penned in Tamil.
இந்தக் கதையின் முன் அத்தியாயங்களைப் படிக்க, கீழ்க்கண லிங்குகளைக் க்ளிக் செய்யவும்:

அத்தியாயம் 11

அத்தியாயம் 10

அத்தியாயம் 9

அத்தியாயம் 8

அத்தியாயம் 7

அத்தியாயம் 6

அத்தியாயம் 5

அத்தியாயம் 4

அத்தியாயம் 3

அத்தியாயம் 2

அத்தியாயம் 1

“இந்தத் தொழிலை ஒரு வித வியாபார ஸ்தாபன அடைகாத்தல் – [ஆங்கிலத்தில் Incubation] ன்னு  வர்ணிக்கலாம். இது ஏதோ புதுசா டெவலப் ஆனதா சில பேரு சித்தரிக்கறாங்க. ஆனா, இந்த யுக்தி ரொம்பப் பழசு. ஒரு விதத்துல, இது கி பி 1600ல ஆரம்பிச்சதுன்னுகூடச் சொல்லலாம்.” சொல்லும்போது அவரிடம் ஒரு விதமான கேலி கலந்த நமட்டுச் சிரிப்பு.

எனகுக் கோபம் வந்தது.

“1600 ல உங்க நாட்டோட கிழக்கு இந்தியக் கம்பெனி எங்க ஊருக்கு வியாபாரம் செய்ய வந்திச்சின்னு நினைவு. வியாபாரம் பண்ணவந்த வெள்ளையன், எங்க நாட்டுக் குறைமதிக் குறு நில மன்னர்களோட பேராசையைப் பயன்படுத்தி, இல்லாத வில்லங்கப் பத்திரங்களை  உருவாக்கி, எங்களை சட்ட விரோதமா 1947 வரைக்கும் ஆண்டாங்க,” என்றேன்.

“உங்க கோணத்துலேந்து பார்த்தால், அப்படித் தெரியும். அதுக்கான கோபம் கூட நியாயம் தான். ஆனா, என்றைக்குமே, எவனும் தானதர்மத்துக்காக வியாபாரம் செய்யறதில்லை. ஏமாறறவங்க அகப்பட்டா, எவன் வேணும்னாலும் ஏமாத்திக் கொள்ளை அடிப்பான். எங்க ஊரின் பழங்காலத்து ஆளுங்க இதுக்கு விதிவிலக்கில்ல. பார்க்கப்போனா, சுமார் 3,000 வருஷங்களுக்கு முன்னால அலக்ஸான்டர் புருஷோத்தமர் ங்கற மன்னரை உங்க ஊரு ஆளு ஒருத்தர் – ஆம்பி ராஜா தான் காட்டிக் குடுத்தாரு. அன்னியர்கள் ஆட்சி ஆரம்பமாயிரிச்சி. அப்புறம் சீனாவோட ஜெங்கிஸ் கான் லேந்து தொடங்கி, நாடிர் ஷா ன்னு எத்தனையோ பெயர்கள். அவனவன் வெவ்வேற காரணங்களச் சொன்னான். அவ்வளவுதான். அதுக்கப்புறமா, சொந்த மாமனார் காட்டிக் குடுத்ததுனால தான் டெல்லியை ஆண்ட ப்ரித்விராஜ் சௌஹான் முஹம்மது கோரி கிட்ட தோற்றான். கோரியோட அடிமைகள் பல தசாப்தங்கள் ஆண்டாங்க. அதுக்கப்புறம் அந்த ஆட்சி நாற ஆரம்பிச்சுது. அதுல ஒருத்தன் பேரு துக்ளக். அந்த வகையறாவுல கடைசி ஆளு இப்ராஹிம் லோதி. அவனை வேற ஒரு உள்ளூர்க்காரன் – ஆஃப்கானிஸ்தான்லேந்து வந்த பாபர் கிட்டக் காட்டிக் குடுத்தான். – முகலாயர்கள் இந்த நாட்டை சில நூற்றாண்டுகள் ஆண்டாங்க. ஐரோப்பாவுலேந்து – ஃப்ரெஞ்சுக் காரங்க, நெதர்லான்டு காரங்க, இத்தாலியருங்க, ப்ரிட்டன் … இப்படி எல்லாரும் நாடு பிடிக்க வெவ்வேற அணுகுமுறையை யூஸ் பண்ணினாங்க.”

அவர் சொன்னது எனது கோபத்தை அதிகரிக்கச் செய்தது.

“அன்னியர்கள் பண்ணின தப்புக்களை நீங்க நியாயப்படுத்தறது போலத் தெரியுதே!”

“எல்லாக் குற்றவாளிகளும் அதைச் செய்யறது சகஜம். உங்க ஊரு மஹாத்மா காந்தியைத் தவிர, எவனுமே, தானா முன்வந்து, ‘அய்யா நான் செஞ்சது சட்டப்படிக் குற்றம். அதுனால என்னை, கால தாமதம் பண்ணாம தண்டியுங்கன்னு’ சொன்னதே கிடையாது.”

பீஹார் மாநிலத்தின் சம்பாரன் பகுதியில், போதைப் பொருளாக விற்கப்படும்போது கொள்ளை லாபம் ஈட்டித் தந்த அபினி என்ற போதை வஸ்துவுக்கு சிவனார் வேம்பு [ஆங்கிலத்தில் Indigo plantation, ஓபியம்] என்று அழைக்கப்பட்ட செடிகளை ஏழைகளை அடிமைகளாக்கி, பல ரவுடிச் செல்வந்தர்கள் பயிரிடச் செய்தார்கள். முன்பணக் கடனளித்து அறுவடையான செடியை அடிமாட்டு விலைக்குக் கொள்முதல்செதனர். இதில் உள்ள லாபத்தை பிற்காலத்தில் கண்ட வெள்ளையர்கள் அதே தொழிலை மேலும் வெளிப்படையாக, ஏழைகளை அதிகமாகச் சுரண்டியபடி செய்தனர். 1917ல், காந்தியடிகள் சம்பாரனில், பிற்காலத்தில் நாட்டின் முதல் இந்திய ஜநாதிபதியான ராஜேந்தரப் பிரசாத் போன்ற பிரபல வக்கீல்களின் உதவியுடன், தொழிலாளிகளுக்காகப் போராடினார். காவல்துறை அவரைக் கைது செய்தது. வெள்ளையர்கள் கோலோச்சிய நீதிமன்றத்தில் அவர், அரசு தரப்பு வக்கீல் குற்றப்பத்திரிக்கை படிக்கும் முன்னரே தான் சட்டத்தை மீறியதை ஒப்புக்கொண்டு சிறை செல்ல விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதன்பின், அப்பகுதியில் எந்த இந்தியரும், எந்தப் பணிக்கும் செல்லவில்லை. கழிவுகள் அகற்றப்படுவது முதல், ஷவரம் செய்வது வரை, அடிமைகளை விட்டுச் செய்யச்சொல்லியே பழகிவிட்ட வெள்ளையர்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. வேறு வழியின்றி மஹாத்மாவை விடுதலை செய்தார்கள். உண்மையில் இந்தியச் சுதந்திரப் போர் சூடு பிடித்தது அந்த நிகழ்விலிருந்து தான்.

“நிகழ்வு நினைவில் இருக்கிறது,” என்றேன் சுருக்கமாக.

“உங்கள் நாட்டின் சுதந்திரப் போர் உண்மையில் 1857லேயே துவங்கியது. ஆனால் உங்களுள் இருந்த பிரிவுகளின் உதவியுடன் அந்தக் காலத்து வெள்ளையர் ஆட்சியாளர்கள் அதை நசுக்கினார்கள். ப்ரிட்டிஷ் அரசு முறையாக, நவம்பர் 1 1858ல் விக்டோரியா மஹாராணியின் பிரகடனத்துடன் செயலுக்கு வந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்ட சிப்பாய்களைக் கூட ப்ரிட்டிஷ் படை பெருந்தன்மையோட ஏற்றதுன்னு பாவ்லா காட்டி மக்களுக்குக் குல்லாப்போட்டாங்க. விக்டோரியா அரசி கிழக்கு இந்தியக் கம்பெனியின் சொத்துக்களை அரசுடைமை எனப் பிரகடனப்படுத்தறப்ப, தனது ஆட்சி எல்லாக் குடிமக்களுக்கும் நியாயம் வழங்கும்னு சொன்னாரு. நடந்தது அதுக்கு நேர் எதிர். அப்போதே – என்றேனும் ஒரு நாள் அடுத்த சுதந்திரப் போர் துவங்கும் என்று கணக்கிட்டார்கள். அதை எதிர்கொள்ளத் திட்டங்கள் உருவாயின. இந்தியர்களின் ஒற்றுமையைக் குலைக்க சில சாமர்த்தியமான யுக்திகள் பயன்பட்டன. அவற்றில் ஒன்று ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு. அது 1871 முதல் அமலுக்கு வந்தது. முதலில் அனைத்துத் தரப்பினரும் தங்களை வெவ்வேறு அந்தணர்கள் குலத்தவர்கள் என்றார்கள். சில உதாரணங்களைச் சொல்லலாம். பொற்கொல்லர்கள் தங்களை விஸ்வப் பிராம்மணர்கள் என்றனர். அன்று தங்களை ‘தேவேந்திரகுல வேளாளர்கள்’ எனக் கூறிக்கொண்டவர்கள் இன்று நலிந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால், தேவேந்திரன் குலத்தில் பிறந்தவர்கள் எவ்வாறு நலிந்தவர்கள் ஆவார்கள் என்ற கேள்வியை, அன்று யாரும் கேட்கவில்லை. இராமயணத்தை எழுதிய வால்மீகியை ஒரு முனிவரெனப் பழங்காலம் முதல் போற்றும் இந்த நாட்டில், வால்மீகி என்ற பெயருடையவர்களை இன்று தீண்டத்தகாதவர்கள் என வட இந்தியாவில் இழிவு படுத்துகிறார்கள். சமூக ரீதியாக அநீதிகளை அனுபவித்தோருக்கு இலவசக் கல்வி, அரசுப் பணிகள், அதில் ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு என்றேல்லாம் அன்று வெள்ளையர்கள் நுழைத்ததால், பிராம்மணர்களும் ஒரு சில ஷத்திரியர்களையும் தவிர, பிற எல்லாத் தரப்பினருமே, சுயனலத்துக்காக, தங்களை நலிந்தவர்கள் என்றனர். இந்தியாவை ஜாதி, மத அடிப்படையில் பிரித்து ஆள இந்த யுக்தி பெரிதும் உதவியது. இந்த திட்டத்தை உயர்த்திப் பிடிச்சு, என்றைக்குமே அடிமை மனப்பான்மையோட செயல்பட இந்தியர்களை பயன்படுத்தற இன்னொரு பரிமாணமாக, வெள்ளையர்களை எதிர்க்கறதாக சொன்ன இந்திய தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை 1885 இல் ஸர் அலன் அக்டேவியன் ஹ்யூம் என்ற முன்னாள் அதிகாரி – இவர் 1857 இல் நடந்த சுதந்திரப்போரில் உள்ளூர்க்காரர்களை தோற்கடித்தவர், துவங்கினார். அதுவும் ஒரு போர் தந்திர மந்திரம். ஏமாத்தறவங்க லாபத்துக்காக அதைச் செஞ்சாங்க. ஆனா, கொஞ்சம்கூட சிந்திக்காம ஏமாந்தது யாரு?”

எனது எரிச்சல் அதிகமாகியது.

“அமாய்யா! ஒவ்வொரு ஏமாத்தறவனும், முடிச்சவுக்கியும் இப்படியே சொன்னானுங்க, சொல்லறாங்க, சொல்லுவானுங்க! ஆனா, அது அன்றும் சரி, இன்றும் சரி, சட்டப்படிக் குற்றம்!”

எனது குரலில் உள்ள காழ்ப்புணர்வை நான் மறைக்கவில்லை..

“அந்த வாதம் ரொம்ப, ரொம்ப கரெக்ட்,” என்றார் அந்த நபர் இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி.

“இவ்வளவு கோர்வையா இந்த விஷயத்தைச் சொல்லறீங்களே, இதுவும் நீங்க செய்யற வியாபாரத்தைப் பெருக்க உதவற யுக்தி தானா?”

“1947 இல் – காங்கிரஸ் சுதந்திரம் வாங்கித் தந்ததாகச் சொல்லி ஆட்சியைப் பிடிச்சிச்சு. அந்த ஆட்சி சுமார் 70 வருஷம் நீடிச்சிரிச்சி. உள் நாட்டுலயும், அல்லசல் நாடுகள்ளயும் பகை விதைகளை நாங்க நட்டோம். செடியை காங்கிரஸ் வளர்த்து, அதை அறுவடை பண்ணினதால, அதுக்கான உரங்களான ஆயுதங்களை அன்றிலிருந்து இன்று வரைக்கும் வெவ்வேறு நாடுகள் உங்களுக்கு விக்கறாங்க. விக்கற நாடுகள் தலைவர்கள் வெள்ளைத் தோல் உள்ளவங்க தான். இந்த ஒரு விஷயத்துக்காக உங்க நாடு மட்டுமே ரூ.80 லட்சம் கோடிகளைச் செலவழிச்சிருக்கு. அதுல – பொருட்களை வித்த நாடுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் கோடிகள் லாபம்!  உயிர்ச்சேதத்துனால பகை அழியாம இருக்கு. அதுவும் ஆயுதம் விக்கற நாடுகளுக்கு லாபம். 18 ஆம் நூற்றாண்டுலேந்து நாங்க ஏமாத்தினோம்ங்கறது எந்த அளவுக்குச் சரியோ, அதேபோல உங்க நாட்டை சமீபகாலம் வரைக்கும் ஆண்ட உங்க அரசியல்வாதிகளும் அதையே செய்யறாங்கங்கறதும் ஒரு மறுக்க முடியாத உண்மை.. ஆக, தவறு யாரோடது?”

“உங்க வார்த்தைகள்ள இருக்கறது பச்சையாகத் தெரியும் இறுமாப்பு, ஆணவம்!”

“அது உங்க கண்ணோட்டம். ஆங்கிலத்துல இதை ஒரு மாதிரியான வாணி…க்க்க்க்கும்….சிகரெட் புகை தொண்டையில சிக்கிகிச்சு … வனித் …. வனிதா …. க்க்க்க்க்க்கும் …. வானிட்டின்னு சொல்லுவாங்க..”

இந்த ஆளுக்கும், வனிதாவுக்கும் ஏதோ கனெக்ஷன் உண்டோ? எனது புருவங்களை நெரித்தேன்.

“வானிட்டி ஃபேர்ன்னு ஒரு English நாவல். அதை ஹீரோவே இல்லாத ஒரு க்ளாஸிக் நாவல்னு சொல்லுவாங்க. அதுல இரு வனிதைகள் முக்கியமான கதாபாத்திரங்கள்.. நல்லவளாப் பரிணமித்த ஒருத்தி அதுல விபச்சாரியா இருந்தா…பாவம்…க்ளைமாக்ஸுக்கு முன்னாடியே இறந்துடறதா சித்தரிக்கப்பட்டா. நான் சொல்லறது 1857ல எழுதப்பட்ட கதையைப் பத்தின செய்தி. அந்த நாவல எழுதினது மேரி அன் எவன்ஸ்ங்கற பெண். ஆனா வெச்சிகிட்ட புனைப் பெயர் ஜார்ஜ் எலியட். அவங்க கணவரோட குடும்பப் பேரு .லூயிஸ்…அந்தக் அந்த வனிதை காரக்டரோட பேரு அமேலியா…எல்லாவிதமான கலைகளுக்கும் உங்க ஊர்ல சிவன் ங்கற கடவுள்தான் ஆரம்பிச்சாருன்னு சொல்லுவாங்க. ஆக, எல்லாக் கதைகளுமே சிவபுண்ணியங்கள்!”

“அடப்பாவி!” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். ஏன் என்றால், வனிதா தனது பெயரை சிவபுண்ணியம் என்றும், தனது ரகசியப் பெயர் அமேலியா லூயிஸ் என்றும் சொன்னது எனக்குப் பளிச்சென நினைவுக்கு வந்தது.

ஆச்சியர்த்தில் வாயைப் பிளந்தேன்.

“தேவை இல்லாம வாயைத் திறந்தா கொசு புகுந்துடும். சமயத்துல  குண்டுகளும் துளைக்கும்,” என்றார் அவர்.

மீண்டும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

-தொடரும்

 

உளவுகாத்த கிளி – 9

முந்தைய அத்தியாய்ங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

என்னோட பாஸ் ஸின்ஹாவுக்கு ஃபோனப்போட்டேன்.

“வனிதா…அவ… பேரு என்னன்னு நமக்குத் சரியாத் தெரியாது… கொஞ்சம் நேரத்துக்கு முன்னால … அவ தன்னோட பெயரை சிவபுண்ணியம்னு சொன்னா… கோட் நேம் அமேலியா லூயிஸ்னும் சொன்னா. வேற ஒரு பெரியத் தகவலச் சொல்லிகிட்டே இருக்கறப்ப, அவளப் போட்டுத்தள்ளிட்டாங்க. அவ இப்ப ஒரு இருட்டான குருட்டு முட்டு சந்து ஆயிட்டா சார்!”

அடுத்த ரெண்டு நிமிஷம் நான் சொன்னதை அவர் இடைமறிக்காமல் கேட்டார்.

“முதல்ல ஆக வேண்டியதைச் செய்வோம்,” என்று கூறிவிட்டு, தொடர்பைத் துண்டித்தார்.

நாட்டின் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மீடியாக்கள் கவனிக்காம இருக்க நாங்கள் ஏதேனும் திசை திருப்பும் திரிசமன்  வேலையைச் செய்து விடுவது உண்டு.

அதற்காக்க் கிளமிபினேன்.

சென்னையில “பறக்கும் ரயில்” எனும் வெள்ளையானையை 80களில் துவங்கினார்கள். பீச் ஸ்டேஷனிலிருந்து வேளச்சேரி வரை – பக்கிங்ஹாம் கால்வாய் மேல் பெரும்பாலும் ஜன நடமாட்டமே இல்லாத நிலயங்களைக் கொண்ட வண்டவாளமான இரட்டை ஜோடி மின்சாரத் தண்டவாளம் அது. காலையிலும் மாலையிலும் ஆஃபீஸ் நேரங்களில் பயணிகள் கொஞ்சம்போலத் தென்படுவார்கள். மற்றடி, அந்த ரயில் நிலையங்களின் அடித்தளங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சவது முதல், கஞ்சா, அபினி பரிவர்த்தனை, , கொலை, கற்பழிப்பு, சூதாட்டம், கடத்தல் பொருள் பதுக்கல, விபச்சாரம் என சகல விதமான “திருவிளையாடல்களும்” நடக்கின்றன. அவற்றின் பூதாகார கேந்திரங்களின் பரப்பளவும், அவற்றின் லொக்கேஷனும் இத்திருப்பணிகளுக்கு உதவுகின்றன. 87முதல் கணக்கிட்டால், மக்கள் குறைந்த பட்சம் ரூ.45,000 கோடிகள், கண்டம், தண்டம்.

மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள, எனக்கு ரேடியோவில் பாட்டுக் கேட்கும் பழக்கம் உண்டு.. காரை ஸ்டார்ட் பண்ணின உடனே சென்னை ஆல் இந்தியா ரேடியோவின் எஃப் எம் கோல்ட் நிலையத்தின் பொத்தானை அழுத்தினேன். தோடி ராகத்தில் தியாகப்பிரம்மம் இராமபிரானைத் தெலுங்கு மொழியில் புகழ்ந்து இயற்றிய – “வெடலனு கோதண்டபாணி…ராமா…” கவிதையை, யாரோ, ஏதோ ஹைதர் காலத்தில் பாடியதை மறு ஒலிபரப்பு செய்துகொண்டிருந்தார்கள்..

சின்ன வயதில் சங்கீதக் கச்சேரிகளை ‘சக்கேரி’ எனக் கிண்டலடிக்கும் பழக்கமுள்ள நான், இந்தப் பாட்டைத் திரித்து … “ராமா, உன்னோட தண்டபத்துல ஆணிடா…” ன்னு அசட்டுத் தனமான போர் அடிக்கற ஜோக் சொல்லிச் சிரித்தது  நினைவுக்கு வந்தது.

சென்னையின் பறக்கும் ரயில் நிற்கும் நிலையங்கள் பொருளாதார ரீதியான இந்தியாவோட தண்ட-மண்டபங்களுக்கான மிகவும் மோசமான எடுத்துக்காட்டுக்கள்.

அவற்றுள் எவனும் சீரியஸாக கவனிக்காத ஸ்டேஷன் தான் லைட் ஹவுஸ் என்கிற கலங்கரை விளக்கம் டெர்மினல்.

அதிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தமிழக காவல்துறை தலைமைபீடம். அதனை அடுத்து ஆல் இந்தியா ரேடியோ அலுவலகம்,  கண்ணுக்கு எட்டற தூரத்தில் பீச் ரோடு என்கிற காமராஜர் சாலை, வல்லப் பாய் பட்டேலின் சாயலில் வடிக்கப்பட்ட காந்தி சிலை, ஸிட்டி மால் எனும் பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இத்யாதி. எல்லாமே உச்சகட்டப் பாதுகாப்புக்குட்பட்ட இடங்கள்.

அப்போது மணி மதியம் சுமார் 3-45.

காரை ராதாகிருஷ்ணன் சாலையில் ப்ரெஸிடன்ட் ஹோட்டல் பார்க்கிங்கில்  நிறுத்தி, அதன் டிக்கியிலிருந்து 3 கிலோ எடை உள்ள பாக்கெட்டை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். 163-ஆவது வினாடியில் ரயிலடியின் அடிவாரத்தை அடைந்தேன். அங்கே ஸி ஸி டி வி காமிராக்கள் இல்லை என ஊர்ஜிதப்படுத்திக்கொண்டேன். அந்த நேரத்தில் அந்த நிலையத்தின் கீழ்தட்டில் யாரும் இல்லை. மனிதக் கழிவுகள் நிரம்பிய ஒரு நாறும் மூலையில், ஒரு டைமரைப் பொருத்தி, அதன் டிக்-டிக்-டிக் துவக்கி, ஏதோ குப்பையை வீசுவது போல எறிந்து, வெளியேறினேன்..

திரும்பி காருக்குள்ள ஏறி அதை ஸ்டார்ட் செய்யும்போது, அந்த பாம்ப் வெடித்தது.

பக்கத்தில் இருக்கறவர்கள் அத்தனைப்பேரின் காதுகளும் பல வினாடிகளுக்கு “ங்கொன்ன்ன்ன்ய்ய்ய்ய்ய்” என ரீங்காரமிடும் என்பது எனக்குத் தெரியும். எனக்கே அந்த நிலை ஏற்பட்டது. அருகிலுள்ள ஒண்ணு ரெண்டு ஈயோ, காக்காயோ செத்திருக்க வாய்ப்புண்டு. சுவரில் ஒன்றிரண்டு விரிசல்கள் ஏற்பட்டிருக்கும். மற்றபடி எந்த இழப்பும் ஏற்பட்டிருக்காது.

அதன் பாதுகாப்பான தமிழகக் காவல்துறை தலைமையகம் கல்லெறியும் தூரத்தில் இருப்பதாலேயே, விரைவில் காக்கிச் சட்டைக்காரர்களும், மீடியாக் காமிராக்களும் ஈக்களைப் போல அந்த ரயில் நிலையத்தைமொய்க்கும் நிலை உருவாகும். உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் மிகவும் கவலை அடைந்த முகபாவத்துடன், “பயங்கரமான ஒலியுடன் இந்த வெடிப்பு நடந்துள்ளது. ஃபாரன்ஸிக் ஆட்களும், பாம்ப் டிஸ்போஸல் ஸ்க்வாடும் ஆராய்ந்த பிறகு தான் எதையும் கூற முடியும்,” என வழக்கம்போல ஆலாபனை செய்துவிடுவார். மைக்குகளை நீட்டும் அரைவேக்காடு வாத்து மடைய ரிப்போர்ட்டர்களுக்கு அந்த விடை போதாதது எனத் நேயர்கள் நினைக்கும்படி, சம்பவத்திற்கு, காது, மூக்கு, காலில் வீக்கம், தலையில் விக், அருகில் நாலு பெண்களுக்கு எடுத்தப் பிரசவ வலி, 4 காக்காய்களின் அகால மரணம்… என இஷ்டத்துக்கு ரீல் விடுவார்கள். ஜனங்களும் தத்தம் வீடுகளில் வாயைப் பொளந்து கொண்டு அதையே கவனிப்பார்கள்.

இந்தக் களேபரத்தால், நாங்கள் செய்யவிருந்த வேலைக்கு இடையூறே இல்லாத நிலையை உருவாக்கிவிட்டேன்..

சென்னையில 14 இடங்களில் நமது நாட்டின் பாதுகாப்புப் படைகள் – மாறுவேடத்தில் அடுத்த 12 நிமிஷங்களுள் செய்யவிருந்த ரெயிடுகளை எவனும்/எவளும் கவனிக்கமாட்டார்கள்.

சட்டத்தை சத்தத்தால மீறி, தண்ட-தண்டப-மண்டபத்தில் ஆணி அடித்து விட்டேன்.

டாக்டர் நடேசன் சாலை வழியாக  ராயப்பேட்டையை அடைய எனக்கு சரியாக 6 நிமிடங்கள் பிடித்தன.

அரசாங்க மருத்துவமனைக்கு அருகே பீட்டர்ஸ் சாலையில் ரத்னா ஆஃப்ஸெட்னு ஒரு பெரிய அச்சகம். அதில் முன்பு வேலை செய்த ஒருவன் – காணாமல் போனதாக நம்பப்பட்டது. அவன் சின்னத் திருட்டுக்களில் ஈடுபட்டவன். முன்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுவன். அவனது நிஜப்பெயர் தருமலிங்கம் யோகேஸ்வரன். இலங்கையின் கிளிநோச்சி பகுதியைச் சேர்ந்தவன்.

காவல்துறைக்குத் தெரிந்த பெயர் தாமஸ் ஃபிலிப்.

ரத்னா ஆஃப்ஸெட் ப்ரெஸ்ஸுக்கு பின்புறம், ஒரு சந்தில் 11 மேன்பாட்ஸ் [MANPADS] எனும் விமானங்கள 11 பறந்து தாக்கி அழிவக்க வல்ல தோள்களிலிருந்து ஃபையர் பண்ணக்கூடிய ஏவுகணைகள் அவனது பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தன.

அவனது நாசவேலைக் கைங்கர்யங்கள் தொடரும் விஷயம் எங்கள் போன்றோருக்குக் கூடத் தெரியாது.

இவனது செயலபாட்டிற்கும், ரத்னா ஆஃப்ஸெட்ங்கற கம்பெனிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றாலும், பயங்கரவாதிகள், சந்தெகமே வராத “கவர் கதைகளை” பயன்படுத்தும் பொருட்டு ரத்னா ஆஃப்ஸெட்டைப் பயன்படுத்த எண்ணினார்கள். அங்கு பல வார இதழ்கள், மாதப் பத்திரிகைகள்  அச்சாகின்றன. விசாரணை என்ற ஏதேனும் ஒரு நிகழ்வு அங்கு ஏற்பட்டால், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு பாதிப்பு என, பயகரவாதிகளிடம் நக்கி உண்ணும் பத்திரிக்கையாளர்கள் கூச்சலை ஆரம்பித்து விடுவார்கள்.

விமான நிலயங்களின் வெளிச்சுவர்களு அருகில் நின்று எந்த கத்துக்குட்டிப் பயங்கரவாதியும், ஏதாவது ஒரு பறக்கத் துவங்குகிற பயணிகளைத் தாங்கிய ரக்கை கட்டிய பஸ்ஸோட பின்புறத்துலேந்து வர்ற வெப்பைப் காற்றை நோக்கி பெரிசாக் குறி எதுவும் பார்க்காம மேன்பாட்ஸ் ஏவுகணையின் குதிரையை அழுத்தினால், , அது வெப்பக்காற்றை மோப்பம் பிடித்து அடுத்த 8 சேக்கன்டுக்குள் ப்ளேனில் உள்ள எல்லோரையும் விசா இல்லாமல் பரலோகத்தில் குடிபெயரச்செய்து விடும். நமது மாநில அரசுகளின் கண்ட்ரோலில் உள்ள காவாலிகளாகிவிட்ட காவல்துறையினருக்கு இது பற்றிய எந்த ஐடியாவும் கிடையாது.  பாதுகாப்பு என்கிற பெயரில் ஃபோனில் ஊர்க் கதை பேசிகிட்டு இருக்கும் வயிறு தள்ளின கான்ஸ்டபிள்கள் கையில் ஒரு கம்பைக் கொடுத்து “பாதுகாப்பை பலப்படுத்த” வி வி ஐ பி க்கள் செல்லும் பாதைகளில்கா வல்துறை உயர் அதிகாரிகள் நிற்கச் செய்வார்கள். அதனாலேயே சென்னை பாதுகாப்பாக இருப்பதாக தொலைக்காட்சிச் சேனல்களுக்குப் பேட்டி கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது.

உருப்படியான வேலைய எங்களைப் போன்றவர்கள் செய்து முடித்தால்தான் உண்டு.

மேன்பாட்ஸ்ங்கற ஏவுகணை [விரிவாக்கம்: மேன் போர்டபிள் ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம்] 70களில் தயாராயிற்று. இதன் ரஷ்ய ப்ரான்ட் – எஸ் ஏ 7 ஐப் பயன்படுத்தி ஆஃப்ரிக்க கண்டத்திலுள்ள கேன்யா நாட்டில் ஒரு இஸ்ரேல் விமானத்தைச் சுட்டு விழுத்த பயங்கரவாதிகள் 2002ல முயற்சி செய்தார்கள். அதை இஸ்ரேலோட மொஸ்ஸாத் தடுத்தது. அத்துடன் அந்தச் செயலில் ஈடுட்ட 28 பேரிடமிருந்து  எல்லாத் தகவல்களையும் கறந்த பிறகு, கை கால்களில் பல முறை குண்டாந்தடிகளால் தாக்கி எலும்பு முறிவுகளை கதறக்கத்ற ஏற்படுத்தினார்கள். இறுதியாக, ஒவ்வொருவர் மீதும் அரை டஜன் குண்டுகளை துப்பாக்கியால் சுட்டு-செலுத்தி, தவணை முறையில் கொன்றார்கள். முதலில் கால் முட்டியில் சுட்டார்கள். அந்த வலியில் துடிக்கையில் ஒரிரு இஸ்ரேலி வீர்ர்கள் அதை இடரிச் செல்லும்போது, வலியால் கத்துபவர்களைக் கிண்டல் செய்து சிரித்தனர். பின்பு அடுத்த முட்டி, அடுத்த கை, கால், இறுதியில் கண்கள். இந்த கோரக் காட்சிகள் லைவாக விடியோக்களில் படம் பிடிக்கப்பட்டு, அவற்றின் நகல்களை இஸ்ரேலை எதிர்க்கும் அனைத்துப் பயங்கரவாதக் குழுக்களுக்கும் சிவன் கோவில் விபூதி பிரசாதம் போல இலவசமாக அனுப்பி வைத்தார்கள், என ஒரு சில “புலனாய்வு ரிப்போர்ட்டுகள்” கூறின.

இச்செயலுக்கு அமெரிக்காவின் உந்துதல் தான் காரணம் என சில அடிப்படை வாத இஸ்லாமியம் பேசும் பயங்கரவாதக் குழுக்கள் “பழிவாங்க” முற்பட்டன. 2003 இல் அமெரிக்காவின் நியூ ஜெரிஸி மாநிலத்தில் இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த, அங்குள்ள அதிருப்தியாளர் குழுக்களுக்கு அளித்துவிட எத்தனித்தனர். இந்த சதித்திட்டத்தை ஆரம்பகட்டத்திலேயே மோப்பம் பிடித்த இஸ்ரேலின் மொஸாத் – அதன் அனைத்துத் தகவல்களையும் அமெரிக்காவின் உளவுத் துறைக்கு அளித்தது. தங்கள் பங்கிற்கு, உளவுத் துறையினர் அதிருப்தியாளர்கள் போல வேடம் பூண்டு – ஏவுகணைகள் ‘வாங்க’ முன்பணம் கொடுத்து, அந்த நாசவேலை கும்பலை வளைத்துப்பிடிக்க உதவினர்.. ஹாஸ்ய எண்ணம் சற்று அதிகமாக உள்ள ஒரு ஸி ஐ ஏ அதிகாரி – இந்த பயங்கரவாதிகளை ஒரு பிரத்யேக விதத்தில் தண்டித்தார். ஒரு மைதானத்தின் நடுவில் மின்சார இணைப்புடனான இரும்புத் தூணை நட்டு, அதில் ஒவ்வொரு பயங்கரவாதியையும் கட்டச் செய்தார். மின்சார உதவியுடன் இரும்புத் தூணைச் சூடேறச் செய்தார். அப்போது அடித்த ஷாக்கில் பயங்கரவாதி நெளியும்போதே தூணின் சூட்டைத் தேடி, அந்தப் பயங்கரவாதிகள் கொண்டுவந்த ஏவுகணைகாளின் குதிரையை தட்டியதால், ஷாக்கில் நெளியும் ஒவ்வொரு பயங்கரவாதியையும் ஏவுகணை வெடிக்கையில் தீப்பிழம்பாகிச் சிதறச் செய்த்தார்.’ ஒவ்வொருவர் கொல்லப்படுவதையும் – அவரது சகாக்களைப் பார்க்கச் செய்தார். அந்த கொடுரக்காட்சியைக் காண்கையில் அக்குழுவில் பலர் அச்சத்தால் மல-ஜல விஸர்ஜனங்கள் செய்தனர். இந்த வீடியோவும் பயங்கரவாதக் குழுக்களுக்குக் காணிக்கையாக அனுப்பப்பட்டதாக செய்திகள் உண்டு.

அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, பல்லாயிரம் கோடி டாலர்கள் செலவில் எல்லா மேற்கத்திய நாட்டு விமான நிலையங்களுக்கும் இது போன்ற அபாயம் நெருங்காதவாறு பார்த்துக்கொண்டார்கள்.

இந்தியாவில் மோடி அரசு பதவி ஏற்றபின்பு தான் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கும் என அக்காலத்தில் யாரும் கனவு கூடக் காணவில்லை.

உலகம் முழுதும் சுமார் 1,60,000 இந்த ரக இயந்திர அழிவுப் பறவைகள்  பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களின் ரகசியக் கூடுகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன.

இதன் மற்ற “பாப்புலர் ப்ராண்டுகள்” சீனாவின்   HN-5, மற்றும் அமெரிக்காவின் ஸ்டிங்கர் ரெட் ஐஸ் [சிகப்புக் கண்கள்].

ரகசியமாக, விடுதலைப் புலிகளின் ஒரு சில தலைவர்களும் பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உதவியுடன் இந்த ரக 97 ஏவுகணைகளை சென்னையில பல இடங்களில் “ஸ்டாக் பண்ணி இருந்த” விஷயத்தைத் தான் வனிதா என்னிடம் – கொல்லப்படும் முன்பு கூறினாள்.

என்னோட கார் கடற்கரை சாலையிலிருந்து பீட்டர்ஸ் ரோட்டில் நுழைந்து ராயப்பேட்டை ஹை ரோட்டை நெருங்கும்போது, காலேஜ் பசங்களைப் போன்ற ஜீன்ஸும் டி ஷர்ட்டுக்களையும் அணிந்திருந்த எங்க கமான்டோஸ், ஃபிலிப்பையும் அவனது சகாக்களையும் “அன்பாக” தோள்கள் மீது கைபோட்டவாறு சிரித்துக் கொண்டே தள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருதார்கள். படையினர் மூன்று நபர்கள், 11 மேன்பாட் ஏவுகணைகளை காய்கறி மூட்டைகள் போலச் சுமந்து கொண்டு ஏதோ ஜோக் அடித்துக்கொண்டு நடந்து செல்வதுபோல நடித்தவாறு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத அம்பாஸிடர் வண்டிகளில் ஏற்றுவதை கண்டேன்.

யாரும், சற்றும் எதிர்ப்பாராத விதத்தில் பிடிபட்டவர்களுள் ஒருவன் திடீரெனத் திமிரி, தன்னை விடுவித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான். பர்ஃபெக்ட் டைமிங்கில் காரை நிறுத்தி அவனைப் பிடித்து, சக்காக்களிடம் ஒப்படைக்கும் முன், ஒரே ஒரு கராத்தே வெட்டை அவனது கழுத்துப்பட்டினியில் அளித்தேன். அவன் கீழே சாய்வதற்குள் எனது தோழர்கள் அவனை வண்டியில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.

நான் ஃபாலோ பண்ணினேன்.

கிண்டி தொழிற்பேட்டையில் பாழடைந்த மண்டபங்கள் போன்ற பல கட்டிடங்கள் உண்டு.

அவற்றில் இரண்டின் வெளிப்புறத்தோற்றத்தை மாற்றாமல், உள்ளே இதுபொன்ற சில “சித்து வேலைகளுக்கு” நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

பொதுவாக, சினிமாப்படங்களில் தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும், இரத்தம் சொட்டச் சொட்ட உதைத்து, கைகால் எலும்புகளை உடைத்து உண்மையை வரவழைப்பதாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஒரு அளவுக்குப் பயன் உண்டு என்பது உண்மை தான்.

ஆனால், தனது கொள்கைகள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை உடைய பயங்கரவாதிகளை எவ்வளவு அடித்து உதைத்தாலும் உண்மையை வரவழைக்க முடியாது. அப்படியே அவர்களைப் பேச வைத்தாலும், அவர்களின் கூற்றில் பல பொய்கள் மறைந்திருக்கும். அப்பொய்களை நம்பி – பல முறை – பல நாடுகள் தவறான முடிவுகளை எடுத்து பின்னர் விழித்ததுண்டு.

நாங்கள் சினிமாவின் சில விஷயங்களை புத்திகூர்மையுடன் கையாளும் பழக்கத்தைக் கொண்டுள்ளோம். அத்துடன், மனிதர்களின் பயம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, காரியத்தைச் சாதிக்கவும் கற்றிருக்கிறோம்.

கமலஹாசன் நடித்து 1995ல் வெளிவந்த “குருதிப்புனல்” படத்தில் பணிபுரிந்த சில ஒப்பனைக் கலைஞர்களை வரவழைத்து, எங்களுள் ஒருவருக்கு பலத்த அடி விழுந்து, கண், மூக்கு, வாய், தாடை, தலை ஆகிய இடங்களிலிருந்து இரத்தம் வழிந்ததுள்ளது போல ஒருவரை தயார் செய்தோம்.

பயங்கரவாதிகளைத் தாங்கி வந்த வண்டிகள் கிண்டியில் எங்களது ஒரு மறைவிடத்தில் நின்றன. அவை பயணிக்கும்போதே எங்களுள் நன்றாக நடிக்கத் தெரிந்த ஒருவர் மேக்கப்புடன் தயாரானார்.

மொத்தம் 97 ஏவுகணைகளும் கைபற்றப்பட்டு, 34 பேர் – இதில் 7 பெண்களும் அடக்கம் – எங்களிடம் சிக்கி இருந்தார்கள்.

அவர்கள் ஒரு அறையில் அமரவைக்கப்பட்டனர்.

நான் உள்ளே சென்று, எல்லோருக்கும் பிரியாணிப் பொட்டலங்களை வழங்கினேன். அவற்றில் விஷம் கலந்திருக்கவில்லை என அவர்களுக்கு நம்பிக்கை வர, அவற்றிலிருந்து சில விள்ளல்களை எடுத்து உண்டேன்.

அவர்கள் சாப்பிட்த் துவங்கிய பின்பு, “பாகிஸ்தான் பயங்கரவாதி வேடத்தில் எங்கள் நடிகர் தோழர் இரத்தம் சொட்டச்சொட்ட சித்திரவதை அனுபவித்த்தவராகத் தத்ரூபமாகத் தெரிந்த தோழர்”  அறைக்கு வரவழைக்கப்பட்டார்.

“விஷயத்தைச் சொன்னா, நைட்டுக்கு ஸ்காச் விஸ்கியோட சைனீஸ் அசைவ நூடுல்ள் சாப்பிடக் கிடைக்கும். சொல்லல்லன்னா, இதோ, இந்த நபரோட கதிதான். பாவம், பாகிஸ்தான்லேந்து இங்க பாம்ப் வைக்க வந்தான். ரொம்ப நேரம் வலிபொறுத்தான். ஆனால், எல்லாருக்கும் இந்த விஷயத்துல ஒரு லிமிட் உண்டு. லிமிட்டை நாங்க தாண்டினோம். இவன் விஷயத்தைப் பூரா கக்கினான்,” என்றேன்.

நான் பேசும்போது ரகசியக் காமிராக்கள் சிக்கிக்கொண்டுள்ள எல்லா பயங்கரவாதிகளின் ரியாக்ஷனையும் ஆராய்ந்தன. எங்களுள் மனோதத்துவ அடிப்படையில் முகபாவாங்களின் மாறுதல்களை வைத்து அச்சத்தின் லெவலும், செய்திகளைச் சொல்ல எந்த அளவுக்கு எந்த நபர் தயாராக இருக்கிறார் என்பதையும் கண்டுபிடிக்கும் கம்ப்யூட்டர்கள் உண்டு. அவற்றை எங்களுள் கைதேர்ந்த அதிகாரிகள் இடைவிடாது கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“என்ன, தம்பி, எங்க விருந்தோம்பல் போதுமா? எல்லவற்றையும் சொல்லி முடித்து விட்டாயா?” நான் எனது “விசேஷக் கைதியின்” முகத்தில் லேசாகத் தட்டிக் கேட்டேன்.

அவனது நடிப்பு அபாரமாக இருந்தது.

வலியால் துடித்து அலறினான்!

“நீயெல்லாம் மனிஷத் தன்மையே இல்லாத காட்டு மிருகம்!”

எனது உதவியாளர் ஒருவர் வந்து ஒரு காகிதத்தை என்னிடம் நீட்டினார்.

அது எங்களது முன்பே தயாரித்த ஸ்க்ரிப்டின் ஒரு பகுதி.

“இவனிடமிருந்து எல்லாமே வந்திரிச்சி. இனி இவன் வெறும் மனிதச் சக்கை! வெரிகுட். இவன் வெச்ச பாம்ப்கள் காரணமா உன்னோட குழந்தைதானே செத்திச்சி?” எனது இன்னொரு சகாவைப் பார்த்துக் கேட்டேன்.

“யெஸ் சார்!”

“இவனுக்கு என்ன தண்டனைன்னு நீ முடிவு பண்ணு!”

அந்த “கைதியை” மிகவும் வெறுப்புடன் பார்ப்பதுபோன்ற பாசாங்கு செய்த எனது தோழன், “என் குழந்தையோட மூளை சிதறிச்சி, சார். அதே நிலை…”

“செஞ்சிட்டாப் போவுது.  கொண்டாப்பா அந்த ஆஸிடை,” என்றேன்.

“கைதியாக நடித்த வனின் தலையில் மண்டைஓட்டின் பகுதிகள் தெரிவதுபோலத் தென்பட ட்ரை ஐஸ் [ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தரம் ரசாயனம்] ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அதன்மீது ஆஸிட் போலத் தெரிந்த கொக்கோலா கலந்த தண்ணீரை ஊற்றினேன். ட்ரை ஐஸ் “புகைந்தது”. “கைதி” அலறினான். ட்ரை ஐஸின் கீழே ஒருதரம் க்ளிப்புடன் நன்றாக அழுத்தப்பட்டு – தக்கபடி “பதனிடப்பட்ட வெள்ளை ஸ்பாஞ்ச் – ரிலீஸாகி, மூளை வெளியே வந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கிற்று! “கைதி” துடிதுடித்து  “இறக்கத் துவங்கினான். சரியான டைமிங்குடன் தண்டனையைப் பரிந்துரைத்த எனது சக தோழன் வாந்தி எடுப்பதுபோல நடித்தான்.

“இந்த அழுக ஆரம்பிக்கற பொணத்தை எடுத்துப்போங்க! நீ மனம் வந்த மட்டுக்கு, இவன் பொணத்தும்மேலயே வாந்தி எடு! மத்தவங்க சாப்பிடும்போது … பாவம் … அது அருவருப்பாக இருக்கும்! சோறு இறங்காது,” என்று நான் ‘பரிவுடன்’ சொன்னேன்.

ட்ராமா ஓவர். எனது சகாக்கள் “செத்த கைதியைக்” கொண்டு சென்றனர்.

நாலு பேர் விஷயத்தைக் கக்க ரெடி என முன்டியடித்துக்கொண்டு கத்தினார்கள்.

சக தோழன் ஒருவனிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்யச் சொல்லி நான் வேறு அறைக்குச் சென்றேன். அங்கு, “வாந்தி எடுத்த” அதிகாரி மோஸஸ், இறந்து கொண்டிருந்த தோழன் அப்பாஸின் மேக்-அப்பைக் கலைக்க உதவிக் கொண்டிருந்தான்.

“அந்த ஆளைப் பண்ணின மாதிரி எங்களையும் பண்ணிடாதீங்க சார். நாங்க எல்லாத்தையும் சொல்லிடறோம்,” என்ற கோரஸ் அடுத்த அறையிலிருந்து ஸ்பீக்கரில் கேட்டது. பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் நிஜமாகவே வாந்தி எடுத்தனர்.

“சீக்கிரமே இது மாதிரி பர்ஃபார்மன்ஸஸுக்கு நம்ம டிப்பார்ட்மென்ட்ல ஆஸ்கார் பரிசு ஒண்ணை உருவாக்கணும். நீங்க  நடிப்புல காட்டின வாந்தி அங்கே நிஜமான வாந்தியை வரவழைச்சிரிச்சி!”

நான் சொன்னவுடன் எல்லோரும் சிரித்தனர்.

எங்களிடம் சிக்கி இருந்த பயங்கரவாதிகள் “பாட” ஆரம்பித்தவுடன், அவற்றின் “பல்லவியே” எங்களை மிரள வைத்தது. அவ்வளவு பயங்கரமான திட்டம்.

கமாண்டோஸ் குழுவின் இரண்டாம் லெவல் தலைவன் ரஜ்னிகாந்த் மிஸ்ரா ராமபிரான் மீதான பக்தியில் ஊறியவன்.

“இஸ் தேச் கோ ராம் பசாயே…” என்று கூறிப் பெருமூச்சு விட்டான்.

“இந்த நாட்டை இராமர் தான் காக்கவேண்டும்,” என்பது அவன் சொன்னதன் பொருள்.

தியாகராஜ ஸ்வாமிகள் ஸிம்ஹேந்திர மத்தியம ராகத்தில் இயற்றிய தெலுங்கில், கிட்டத்தட்ட இதே பொருளுள்ள பாடலின் பல்லவி என் நினைவிற்கு வந்தது. “ராமா…நீடு சரணமுலே!”

இவற்றை முழுமையாகக் கேட்டதும், எனது மனசு என்னவோ செய்தது. ஆனால், நான் முன்பே முடிவுசெய்யப்பட்ட ஒரு திட்டப்படி பணி புரியவேண்டுமென்பதில் எந்த மாற்றமும் இல்லை.

அடுத்த கட்டப் பணிக்குத் தயாரானேன்.

-தொடரும்